கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் கைது! அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

PARIS TAMIL  PARIS TAMIL
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் கைது! அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

வெளிநாட்டவர் ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய போதை மருந்து தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
போதை மருந்து அடங்கிய மாத்திரைகளை நாட்டுக்குள் எடுத்துவர முயற்சித்த சந்தேகத்தின் பேரில், பிரேசிலைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
 
குறித்த நபர் இன்று (17) காலை இலங்கை வந்துள்ளார். அவரைச் சோதனையிட்டபோது, அவரது உடலில் 45 ‘கெப்ஸுல்’ வடிவ மாத்திரைகள் இருந்ததை சுங்கத்துறையினர் அவதானித்தனர்.
 
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், அவற்றில் கொக்கெய்ன் போதைப்பொருள் அடங்கியிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது.
 
இதையடுத்து, அவர் போதை மருந்து தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மூலக்கதை