5 இந்திய வீரர்கள் பலி : பாக்., கூறுகிறது

தினமலர்  தினமலர்
5 இந்திய வீரர்கள் பலி : பாக்., கூறுகிறது

இஸ்லாமாபாத்: இந்தியா - பாக்., எல்லை கட்டுப்பாடு கோடு அருகே, இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில், இந்திய வீரர்கள், ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும், பாக்., ராணுவம் தெரிவித்துள்ளது. இதனை இந்திய ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது குறித்து, பாக்., ராணுவ செய்தி தொடர்பாளர், மேஜர் ஜெனரல், ஆசிப் கப்பர் கூறியதாவது: இந்திய ராணுவத்தின் எல்லை தாண்டிய அத்து மீறல்கள் அதிகரித்துள்ளன. இந்திய ராணுவத்தின் அத்துமீறிய செயலுக்கு பதிலடி தரும் வகையில், எல்லையோரம் செயல்பட்டு வந்த, அவர்களின் ராணுவ நிலை மீது, பாக்., ராணுவம் தாக்குதல் நடத்தி, அதை அழித்துள்ளது. இதில், இந்திய வீரர்கள், ஐந்து பேர் பலியாகி உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பாக்., ராணுவ செய்தி தொடர்பாளர் கூறிய தகவல்களை, நம் ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மூலக்கதை