மீண்டும் தலைதூக்கும் - தொடரூந்து தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
மீண்டும் தலைதூக்கும்  தொடரூந்து தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம்!!

CGT தொழிற்சங்கம் தன் தொடரூந்து ஊழியர்களுக்கு, மாபெரும் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. 
 
மார்ச் 22 ஆம் திகதி நாடுதழுவிய ஆர்ப்பாட்டமாக இது இடம்பெற உள்ளது. தொடரூந்து தொழிலாளர்களின் ஊழியங்களை அதிகரிக்க கோரி இந்த ஆர்ப்பாட்டம் நாடு தழுவிய அர்ப்பாட்டமாக இடம்பெற உள்ளது என தொழிற்சங்க தலைவர் Philippe Martinez இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். SNCF இடம் பணிபுரியும் ஊழியர்களில் 90 வீதமானவர்கள் CGT தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள். இந்த ஆர்ப்பாட்டத்தின் அவசியத்தை அரசு உணரவேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.  
 
இதுதொடர்பான மேலதிக தகவல்கள் வெளிவராத நிலையில், போக்குவரத்து பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
 

மூலக்கதை