ஜனாதிபதி தேர்தலில் பிறிதொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்க தயார்! - மரீன் லூ பென்!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஜனாதிபதி தேர்தலில் பிறிதொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்க தயார்!  மரீன் லூ பென்!!

வரும் 2022 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் தன்கட்சியில் இருந்து பிறிதொரு வேட்பாளரை நிறுத்த தாம் தயார் என மரீன் லூ பென் தெரிவித்துள்ளார். 
 
2017 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முதல் சுற்றில் வெற்றி பெற்று, இரண்டாம் சுற்றில் இம்மானுவல் மக்ரோனிடம் தோல்வியடைந்த தேசிய முன்னணி கட்சியின் தலைவர், மரீன் லூ பென் இந்த புதிய முடிவை அறிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கட்சி சந்திப்பு ஒன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
'தேசிய முன்னணி கட்சியில் இருந்து யாரேனும் சிறப்பாக செயற்பட முடிந்தால், அவருக்கு நான் ஆதரவாக இருக்க நான் தயார். என்னுடைய சொந்த அரசியல் வாழ்க்கை என்பதை தாண்டி, கட்சியின் நலத்தை சிந்திக்கின்றேன். தேவையான ஆலோசனைகளை பின்னால் இருந்தே வழங்குவேன்!' என மரீன் லூ பென் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை