பிரான்சை அச்சுறுத்தும் தொற்றுநோய்! - 5400 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல்!!
பிரான்சை புதிய தொற்றுநோய் ஒன்று ஆட்கொண்டிருப்பதாக முன்னதாக தகவல் தெரிவித்திருந்தோம். கடந்த டிசம்பரில் இருந்து பிரான்சின் பல்வேறு பகுதிகளி பரவி வரும் இந்த தொற்று நோயினால் இதுவரை 5400 பேர்கள் பலியாகியிருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 137,000 பேர்களிடம் இந்த தொற்றுநோய் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் இருந்து 1.7 மில்லியன் பேர்களுக்கு இந்த தொற்றுநோய் காய்ச்சல் பரவியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இதுவரை 7400 பேர்கள் நேரடியான தொற்றுநோய்க்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். இவர்களில் 5400 பேர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 90 வீதமானவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.
இந்தவாரம், பெப்ரவரி 5 இல் இருந்து 11 ஆம் திகதி வரை 4000 பேர் இந்த தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.