ஊடகவியலாளர் சந்திப்பு இடத்தை மாற்றவுள்ள எலிசே! - புதிய முடிவு!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஊடகவியலாளர் சந்திப்பு இடத்தை மாற்றவுள்ள எலிசே!  புதிய முடிவு!!

எலிசே மாளிகையில், கடந்த 40 வருடங்களாக ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெறும் பகுதியினை மாளிக்கைக்கு வெளியே அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த தகவல் நேற்று புதன்கிழமை வெளியாகியுள்ளது. பல்வேறு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஊடகவியலாளர்களுக்காக சுதந்திரம் மற்றும், அதிகளவான ஊடகவியலாளர்களை உள்வாங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் தொடர்பாடல் ஆலோசகர் Sibeth Ndiaye இந்த தகவலை நேற்று ஊடகங்களுக்கு அறிவித்தார். 
 
இம்மானுவல் மக்ரோன் கடந்த மே மாதத்தில் எலிசேக்கு வந்ததில் இருந்து ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு அடிக்கடி இடம்பெறுகிறது எனவும், இது அவர்களுக்கு இலகுவாக இருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எனினும் இது ஆரம்ப கட்ட முடிவு தான் எனவும், தீர்மானம் விரைவில் கொண்டுவரப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மூலக்கதை