யுவராஜ் சிங் எடுத்த அதிர்ச்சி முடிவு!

PARIS TAMIL  PARIS TAMIL
யுவராஜ் சிங் எடுத்த அதிர்ச்சி முடிவு!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற விரும்புவதாக இந்திய வீரர் யுவராஜ்சிங் கூறியுள்ளார்.
 
அவர் கூறுகையில், எனது மிகச்சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி முடித்துவிட்டேன். இனி சாதிப்பதற்கு ஒன்றும் இல்லை என்று எனது உள்மனது உணரும் போது ஓய்வு முடிவை அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.
 
மேலும் வருங்காலத்தில் தனது அறக்கட்டளையின் மூலம் புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துவதுடன் பயிற்சியாளராக செயல்படும் எண்ணமும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
36 வயதாகும் யுவ்ராஜ் அண்மைக்காலமாக இந்திய தேசிய அணியில் இணைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

மூலக்கதை