யாழில் குடும்ப பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பரிதாபம்! கணவரால் நேர்ந்த துயரம்

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் குடும்ப பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பரிதாபம்! கணவரால் நேர்ந்த துயரம்

யாழ். சாவகச்சேரி பகுதியில்  பெண்ணொருவர் பாதுகாப்பு கோரி தனது குழந்தைகளுடன் வைத்தியசாலையில் தஞ்சமடைந்துள்ள செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.
 
நேற்றைய தினம் அவர் இவ்வாறு வைத்தியசாலையில் தஞ்சமடைந்துள்ளார்.
 
35 வயதான சாவகச்சேரி, கிராம்புவிலைச் சேர்ந்த குறித்த குடும்பப் பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
 
குறித்த பெண் வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையை அடைந்துள்ளார்.
 
இதன்போது அந்த குடும்ப பெண், தனது கணவன் தன்னை மோசமாக தாக்கியதுடன், வாளாலும் தலையில் வெட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
 
எனவே தாக்கப்பட்ட தனக்கும், குழந்தைகளுக்கும் கணவனால் ஆபத்து ஏற்படா வண்ணம் பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளார்.

மூலக்கதை