சத்தீஸ்கரில் குண்டுவெடிப்பு 3 ராணுவ வீரர்கள் காயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சத்தீஸ்கரில் குண்டுவெடிப்பு 3 ராணுவ வீரர்கள் காயம்

பிஜாபூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில், அரசுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் செயல்பட்டு வருகின்றனர். இதை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மாவோயிஸ்டுகளை ஒடுக்க போலீசார், ராணுவ வீரர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வீரர்கள், போலீசாரை குறிவைத்து மாவோயிஸ்டுகள் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.

பிஜாபூர் என்ற இடத்தில் நேற்று ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் செல்லும் வழியில் வெடிகுண்டுகளை மாவோயிஸ்டுகள் மறைத்து வைத்திருந்தனர். அந்த குண்டுகள் திடீரென வெடித்து சிதறியதில் 3 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.

 இத்தாக்குதலை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பிஜாபூர் பகுதியில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகளவில் இருப்பதால், இங்கு இதுபோன்ற தாக்குதல்களை அடிக்கடி அரங்கேற்றி வருகின்றனர். இப்பகுதியில் சாலைப் பணிக்காக கொண்டுவரப்பட்ட 10க்கும் மேற்பட்ட வாகனங்களை மாவோஸ்டுகள் சமீபத்தில் தீவைத்து எரித்தது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை