திருப்பதி கோயிலில் ரூ.3.08 கோடி காணிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருப்பதி கோயிலில் ரூ.3.08 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் 52 ஆயிரத்து 271 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 6 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மலைப்பாதை வழியாக நடந்து வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ரூ. 300 க்கான டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது.

இதில் பக்தர்கள் ரூ. 3. 08 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

.

மூலக்கதை