இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங், அவரது மனைவி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேச மாநில முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங்(83).

இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தின் மூலம் கிடைத்த வருவாயை கொண்டு எல்ஐசி பாலிசிகள் எடுத்துள்ளார். இதில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், இதைக்கொண்டு சொத்துக்கள் வாங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

சுமார் ரூ. 7 கோடி அளவுக்கு முறைகேடு நடந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக, வீர்பத்ர சிங், அவரது மனைவி, எல்ஐசி ஏஜெண்ட் உள்ளிட்ட 6 பேர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில், இவர்கள் மீது அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இது விரைவில் விசாரணைக்கு வருகிறது.     

.

மூலக்கதை