ஜார்க்கண்டில் லாரி மீது கார் மோதி 5 பேர் பலி
லேத்கர்: ஜார்க்கண்டில், லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம், லேத்கர் பகுதியில் இன்று கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், அதில் பயணம் செய்தவர்கள் உள்ளே சிக்கி கொண்டனர். அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார், காரில் சிக்கியவர்களை மீட்டனர்.
இதில் 5 பேர் அதே இடத்தில் உயிரிழந்தது தெரியவந்தது.
படுகாயம் அடைந்த 7 பேரை அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.