பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: பாஜ கூட்டணி கட்சிகள் கடும் விமர்சனம்.

தமிழ் முரசு  தமிழ் முரசு
பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: பாஜ கூட்டணி கட்சிகள் கடும் விமர்சனம்.

புதுடெல்லி: ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், கர்நாடகா, மிசோரம், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டும், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் அடுத்த ஆண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜ அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் என்ற நிலையில் பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது.

மத்தியில் பாஜ கூட்டணி அரசில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவிற்கு என்று மத்திய பட்ஜெட்டில் எந்தஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என விமர்சனம் செய்து உள்ளது. ஆந்திராவின் புதிய தலைநகராக அறிவிக்கப்பட்டு உள்ள அமராவதி தொடர்பாக எந்தஒரு அறிவிப்பும் வெளியாகாதது பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட திட்டம் மற்றும் சலுகை எதுவும் பட்ஜெட் உரையில் இடம்பெறவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.

தெலுங்கு தேசம் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் மற்றும் மத்திய அறிவியல்-தொழில்நுட்ப துறைகளின் இணை அமைச்சரான  ஒய். எஸ். சவுத்ரி, மத்திய பட்ஜெட்டில் நாங்கள் மிகவும் அதிருப்தி அடைந்து உள்ளோம்.

ரெயில்வே மண்டலம், ஆந்திரப் பிரதேசத்துக்கான நீர்ப்பாசனத் திட்டம், தலைநகர் அமராவதி கட்டமைப்புக்கு நிதி மற்றும் ஆந்திர பிரதேசத்திற்கான நிலுவையில் உள்ள திட்டங்கள் எதையும் மத்திய பட்ஜெட் சரிசெய்யவில்லை,”என குறை கூறியுள்ளார்.

சிவசேனா எம். பி.

அரவிந்த் சவந்த் கூறுகையில், தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் பட்ஜெட். அதனால், தொழில்துறையில் இருந்து விவசாயம், சுகாதாரம், கல்வி ஆகியவை மீது அரசு கவனம் செலுத்தி உள்ளது என கூறி உள்ளார்.



.

மூலக்கதை