ராகுல் டிராவிட் போல் ஒருவர் பாகிஸ்தான் இளம் வீரர்களுக்கு தேவை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராகுல் டிராவிட் போல் ஒருவர் பாகிஸ்தான் இளம் வீரர்களுக்கு தேவை

கராச்சி: இந்திய யு-19 அணியின் தலைமை பயிற்சியாளராக, சீனியர் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் உள்ளார். 2016ம் ஆண்டிலும் கூட ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ்தான் இந்திய அணி யு-19 அணி, உலக கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்திய இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் ராகுல் டிராவிட்டுக்கே உரியது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.

அதே சமயம் பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் மற்றும் பீல்டிங் செய்த விதத்தை பார்க்க வேதனையாக இருந்ததாகவும், அதனால் பாகிஸ்தான் ஜூனியர் கிரிக்கெட்டில் முழுமையாக மறு சீரமைப்பு செய்ய வேண்டும் எனவும், ஜூனியர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் இளம் வீரர்களுக்கு ராகுல் டிராவிட் போல் ஒருவர் ேதவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


.

மூலக்கதை