தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் குடும்பஸ்தர் செய்த காரியம்!

PARIS TAMIL  PARIS TAMIL
தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் குடும்பஸ்தர் செய்த காரியம்!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் நபரொருவர் நஞ்சு அருந்தியுள்ளார்.
 
இந்த நிலையில் குறித்த நபர் சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
குறித்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலைய வட்டாரங்களை வினவிய பொழுது, அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றிருப்பதனை உறுதிப்படுத்தி உள்ளனர்.
 
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 
 
பொலிஸ் நிலையத்தில் வேலை செய்கின்ற பெண் பொலிஸ் அதிகாரி ஒருவருடைய கணவன், பகல் அவருடன் வந்து உரையாடியாடியுள்ளார். திடீரென அவர் நஞ்சு அருந்தியுள்ளார். அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் உடனடியாக சேர்க்கப்பட்டார்.
 
இதற்கு குடும்பத்தகறாரே காரணம் என கூறப்படுகிறது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை