குரங்கில் இருந்து மனிதனா? மத்திய அமைச்சர் மறுப்பு

தினமலர்  தினமலர்
குரங்கில் இருந்து மனிதனா? மத்திய அமைச்சர் மறுப்பு

அவுரங்காபாத்:''குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்ற, சார்லஸ் டார்வினின் தவறான கோட்பாட்டை, பள்ளி பாடப் புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை, இணை அமைச்சர், சத்யபால் சிங் கூறினார்.
அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
'குரங்காக இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சி அடைந்து தான், மனிதன் உருவானான்' என்ற, சார்லஸ் டார்வினின், 'மனிதனின் பரிணாம வளர்ச்சி' கோட்பாடு, முற்றிலும் தவறானது.மனிதன், இந்த பூமியில் உருவான காலத்தில் இருந்தே, மனிதனாகத் தான் இருந்தான். ஒரு குரங்கு மனிதனாக மாறியதை பார்த்ததாக, நம் முன்னோர் யாரும் கூறியது இல்லை.
அந்த காலத்தில் எழுதப்பட்ட புத்தகங்களிலும், இப்படி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதனால், டார்வினின் இந்த கோட்பாடு தவறானது. பள்ளி, கல்லுாரி பாடப் புத்தகங்களில் இருந்து, அதை நீக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை