உயிர் விலை மதிக்க முடியாதது : ராஜ்நாத்சிங்

தினமலர்  தினமலர்
உயிர் விலை மதிக்க முடியாதது : ராஜ்நாத்சிங்

புதுடில்லி: உயிர் நீத்த ராணுவ வீரர்களின் உயிருக்கு விலையை நிர்ணயிக்க யாராலும் முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது : ‛‛ராணுவத்தில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு, நாம் எவ்வளவு பணம் கொடுத்தாலும், அது, குறைவாகவே இருக்கும். மனித உயிருக்கு விலையை நிர்ணயிக்க யாராலும் முடியாது. ராணுவத்தில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு, குறைந்தபட்சம், ஒரு கோடி ரூபாயாவது தரப்பட வேண்டும் என, கருதுகிறேன்.'' என கூறினார்.

மூலக்கதை