யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் 9 ஆவிகள்? விசேட பூஜையில் வர்த்தகர்கள்
யாழ்ப்பாண நகரில் 9 ஆவிகளால் தாம் அச்சமடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளது.
இந்த, நகரில் உள்ள வர்த்தகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விசேட பூஜைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த வர்த்தகர்கள்,
நான்கு குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களின் ஆவி யாழ். நகரில் உள்ள வர்த்தக நிலையங்களை ஆட்டுவிப்பதாகவும் வர்த்தகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்கள் உயிரிழப்பதற்கு முன்னர் 127 வர்த்தக நிலையங்கள் காணப்பட்டதாகவும் தற்போது 49 வர்த்தக நிலையங்களே காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.
முன்னர் வர்த்தக நிலையங்களில் பாரிய இலாபம் கிடைத்தது. ஆனால் தற்போது நஷ்டம் ஏற்படுவதோடு பெரிய பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
இந்த கடை தொகுதிகள் ஆவிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் யாழ். நகரில் உள்ள வர்த்தகர்கள், தமது வியாபார நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு ஆவிகளை விரட்டுவதற்காக விசேட பூஜைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில் அண்மையில் இறந்தவர்கள் எந்த நோயினால் இறந்தார்கள் என கண்டறியப்படவில்லை. எனினும் இது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என யாழ்ப்பாண சுகாதார அதிகாரிகள் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.