கெஜ்ரிவாலுடன் எவ்வித தொடர்பும் இல்லை: அன்னா ஹசாரே பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கெஜ்ரிவாலுடன் எவ்வித தொடர்பும் இல்லை: அன்னா ஹசாரே பேச்சு

சதரா: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் எவ்வித தொடர்பும் கிடையாது என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். ஆதாயம் தரும் பதவியால் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் பதவி பறிப்பு நடவடிக்கை குறித்த கேள்விக்கு இவ்வாறு அவர் கருத்து தெரிவித்துள்ளார். ஆதாயம் தரும் இரட்டை பதவி விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 20 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யலாம் என்ற ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இது டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவிடம் கேட்டபோது, ‘‘அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி தொடங்கியது முதல் எங்களுடைய பாதை வேறுவேறாகிவிட்டது.

எங்களுக்குள் எவ்வித தொடர்பும் கிடையாது. கட்சி தொடங்க வேண்டாம் என்று கெஜ்ரிவாலிடம் கூறினேன்.

அதை அவர் கேட்கவில்லை’’ என்றார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அன்னா ஹசாரே தொடங்கியபோது, அவருடன் இணைந்து கெஜ்ரிவால் செயல்பட்டார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியை தொடங்கியபோது அதை அன்னா ஹசாரே எதிர்த்தார்.

இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில், ஆதாயம் தரும் இரட்டை பதவி விவகாரத்தில் 20 எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்படவுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி மீது அன்னா ஹசாராவேக்கு அதிருப்தி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

.

மூலக்கதை