மல்லையாவுக்கு எதிராக கைது, 'வாரன்ட்'

தினமலர்  தினமலர்
மல்லையாவுக்கு எதிராக கைது, வாரன்ட்

பெங்களூரு : முதலீடுகளை பெறுவதற்காக போலி ஆவணங்களை தாக்கல் செய்து மோசடி செய்ததாக, பிரபல தொழிலதிபர், விஜய் மல்லையா உட்பட, 19 பேருக்கு எதிராக, பெங்களூரு நீதிமன்றம் கைது, 'வாரன்ட்' பிறப்பித்துள்ளது.

வங்கிகளில், கடன் வாங்கி மோசடி செய்தது தொடர்பான வழக்குகளை தொடர்ந்து, விஜய் மல்லையா, லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவர் மீது, நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் பல வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், 'கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனத்துக்கு முதலீடுகள் பெறுவதற்கு, போலி ஆவணங்களை தாக்கல் செய்து மோசடி செய்ததாக, மல்லையா உட்பட, 19 பேர் மீது, பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால், இவர்களுக்கு எதிராக கைது, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மூலக்கதை