விடாமுயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் : விருதுகளை அள்ளிய கோஹ்லிக்கு அஸ்வின் பாராட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
விடாமுயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் : விருதுகளை அள்ளிய கோஹ்லிக்கு அஸ்வின் பாராட்டு

செஞ்சுரியன்: 2017ம் ஆண்டுக்கான ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் விருதுகளை இந்திய கேப்டன் விராட் கோஹ்லி வென்றுள்ளார்.

அத்துடன் ஐசிசி ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கனவு அணிகளின் கேப்டனாகவும் விராட் கோஹ்லியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விராட் கோஹ்லிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘’உங்கள் (விராட் கோஹ்லி) கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் இது’’ என பாராட்டியுள்ளார். 2016ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ெடஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுகளை ரவிச்சந்திரன் அஸ்வின் வென்றது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை