பெரம்பூரில் 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது
சென்னை : சென்னை பெரம்பூரில் 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் கைது செய்யப்பட்டார். பள்ளிக்கு 10 நிமிடம் காலதாமதாக சென்ற மாணவரை, டக்வாக் எனப்படும் வாத்துபோல் முட்டி போட்டு செல்லும் தண்டனையை உடற்கல்வி ஆசிரியர் வழங்கியதாக கூறப்படுகிறது. அப்போது மயங்கி விழுந்த மாணவனை, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு ஆசிரியர்கள் அழைத்து சென்றுள்ளனர். எனினும், வழியிலேயே உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் கைது செய்யப்பட்டார்.