ஐ.பி.ஓ., வருகிறது கேலக்ஸி சர்பக்டன்ட்ஸ்
புதுடில்லி : மும்பையைச் சேர்ந்த, கேலக்ஸி சர்பக்டன்ட்ஸ் நிறுவனம், குளியல் சோப்பு, சலவை பவுடர், கேசம் மற்றும் சரும பராமரிப்பு பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கான, ரசாயனப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடுகிறது.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு, 2017 நவம்பரில் விண்ணப்பித்தது. இதற்கு, தற்போது அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இந்நிறுவனம், விரைவில் பங்கு வெளியீட்டில் களமிறங்கி, 1,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது.
ஏற்கனவே இந்நிறுவனம், 2011ல், 200 கோடி ரூபாய் திரட்டும் நோக்கில், பங்கு வெளியீட்டில் களமிறங்கியது. அப்போது, போதிய அளவிற்கு முதலீட்டாளர்களின் ஆதரவு கிடைக்காததால், பங்கு வெளியீட்டை திரும்பப்பெற்றது. தற்போது, நிறுவனம் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளதால், பங்கு வெளியீடு வெற்றி பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.