சனத் ஜெயசூரியாவிற்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை நிறைவு!

PARIS TAMIL  PARIS TAMIL
சனத் ஜெயசூரியாவிற்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை நிறைவு!

இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரியாவிற்கு அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகர வைத்தியசாலையில் வெற்றிகரமாக முழங்கால் அறுவைச் சிகிச்சை அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
சிகிச்சையின் பின்னர், எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
 
கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த சகலதுறை வீரராகவும், அதிரடி ஆரம்பத்துடுப்பாட்ட வீரராகவும் விளங்கிய, இலங்கையணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரியா கடந்த பல வருடங்களாக முழங்கால் உபாதையால் பாதிக்கப்பட்டிருந்தார்.
 
ஊன்றுகோளின் உதவியுடனேயே இனி நடக்க முடியும் என்ற நிலை வந்த போது, அவர் முழங்காலில் சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு தீர்மானித்தார். இதற்கமைய கலந்த ஓரிரு வாரங்களாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த சனத்திற்கு, தற்போது வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்ற சனத், பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதியமைச்சராகவும் பதவி வகித்திருந்தார். ஆனாலும், அரசியல் வாழ்வில் அவ்வளவு ஈடுபாடில்லாத அவர், கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டிருக்கவில்லை.
 
இலங்கை அணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் தெரிவுக்குழுத் தலைவராகவும் பணியாற்றியிருந்த சனத், பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கையணிக்கு தனது ஆலோசனைகளையும், ஆதரவையும் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

மூலக்கதை