ஜோந்தாமியை இடித்துத்தள்ளிய மகிழுந்து! - நிறை போதையில் சாரதி கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஜோந்தாமியை இடித்துத்தள்ளிய மகிழுந்து!  நிறை போதையில் சாரதி கைது!!

ஜோந்தாம் அதிகாரி ஒருவர் மீது மகிழுந்து மோதி மிக மோசமாக காயமடைந்துள்ளார். மகிழுந்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். 
 
நேற்று திங்கட்கிழமை jura மாவட்டத்தின் Lons-le-Saunier பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சோதனை நடவடிக்கைகளுக்காக மகிழுந்து ஒன்றினை ஜோந்தாமினர்கள் மறித்துள்ளனர். ஆனால் மகிழுந்து நிறுத்தப்படாமல் தொடர்ந்து சென்றுள்ளது. இதனால் ஜோந்தாமினர்கள் ஆபத்தினை தவிர்க்கும் முகமாக, குறித்த மகிழுந்தினை துரத்திச்சென்றுள்ளனர். சிறிது நேர துரத்தலின் பின்னர் குறுக்கறுத்து நின்ற ஜோந்தாமினர்களின் கண்காணிப்பு வாகனத்தை குறித்த மகிழுந்து மோதி தள்ளியுள்ளது. இதனால் இரு ஜோந்தாமினர்கள் காயமடைந்துள்ளனர். 
 
46 வயதுடைய மகிழுந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளனர். இரத்தத்தில் 3.35 கிராம்ஸ் மது இருந்ததாக ஜோந்தாமினர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை