இந்தோனோஷியாவில் பங்குச்சந்தை கட்டடம் இடிந்து 75 பேர் காயம்

தினமலர்  தினமலர்
இந்தோனோஷியாவில் பங்குச்சந்தை கட்டடம் இடிந்து 75 பேர் காயம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் தேசிய பங்குச்சந்தை, மத்திய ஜகார்த்தாவில் அமைந்துள்ள இரட்டை கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.


இந்தோனோஷியாவின் தலைநகர் ஜகார்தாவில் பங்குச்சந்தை தலைமை அலுலகம் உள்ளது. இங்கு நேற்று கட்டடத்தின் இரண்டாவது மாடி இடிந்தது. இந்த விபத்தில் 75 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக இதே கட்டடத்தை கடந்த 2000-ம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

மூலக்கதை