பா.ஜ. குறித்து அவதூறு: சித்தராமையா மீது போலீசில் புகார்

தினமலர்  தினமலர்
பா.ஜ. குறித்து அவதூறு: சித்தராமையா மீது போலீசில் புகார்



பெங்களூரு: பா.ஜ., ஆர்.எஸ்.எஸ். குறித்து அவதூறாக பேசியதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீது போலீசில் புகார் கூறப்பட்டது.

கார்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் கடந்த 10-ம் தேதி பொதுக்கூட்டம் ஒனறில் பேசிய காங். முதல்வர் சித்தராமையா, ஹிந்துதுவா என்பது மனதில் இருக்க வேண்டும். இப்போது ஹிந்துத்துவாவை பிரசாரம் செய்யும், பா.ஜ. ஆர்.எஸ். எஸ். அமைப்பினர் நாதுரம் கோட்சேவை ஆதரிப்பவர்கள்.. இவர் ஹிந்து பயங்கரவாதிகள் என்றார். காங். மூத்த தலைவர் தினேஷ் குண்டுராவ், பா.ஜ.வை தடை செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு பா.ஜ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பா.ஜ. மாநில மூத்த தலைவர் சுரேஷ்குமார், சுனீல்குமார் ஆகியோர் பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம் புகார்மனு கொடுத்தனர். அதில் பொறுப்புளள அரசியல் தலைவராக உள்ள மாநில முதல்வர் இப்படி பேசுவது சரியல்ல..பா.ஜ.வையும், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பையும் அவதூறாக பேசிய சித்தராமையா, காங். மூத்த தலைவர் தினேஷ் குண்டுராவ் மீது முதல்வர் தகவல் அறிக்கை பதிய வேண்டும் .இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

மூலக்கதை