மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ

தினமலர்  தினமலர்
மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ

போபால் : ம.பி.,யில், மத மாற்றத்தில் ஈடுபட்டதாக, கிறிஸ்துவ பாதிரியார்கள் இருவர் மற்றும் 30 பேர் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர். பாதிரியாரின் காருக்கு தீ வைத்த இளைஞனை, போலீசார் கைது செய்தனர்.

ம.பி., மாநிலம் சத்னா மாவட்டத்தில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஜெப கூட்டம் நடத்திய பாதிரியார்கள், ஹிந்துக்களை மத மாற்றம் செய்ததாக புகார் எழுந்தது. 5,000 ரூபாய் கொடுத்து, தர்மேந்திர தார் என்ற நபரை, தர்மேந்திர தாமஸ் என, பெயர் மாற்றம் செய்து, கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றியதாக, பஜ்ரங்தள் அமைப்பினர், போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, இரண்டு பாதிரியார்கள் மற்றும் 30 பேரை, போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, அங்கு வந்த இளைஞன் ஒருவன், பாதிரியாரின் காருக்கு தீ வைத்தான். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, காருக்கு தீ வைத்த இளைஞனை, போலீசார் கைது செய்தனர். பாதிரியார் மற்றும் 30 பேரை, விசாரணைக்கு பின், போலீசார் விடுவித்தனர்.

மூலக்கதை