சர்ச்சில் தாக்குதல் : பாக்.,கில் 10 பேர் பலி

தினமலர்  தினமலர்
சர்ச்சில் தாக்குதல் : பாக்.,கில் 10 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின், குவெட்டா நகரில் உள்ள சர்ச்சில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, ஏராளமான கிறிஸ்தவர்கள் சர்ச்சுக்கு வந்திருந்தனர். அப்போது, துப்பாக்கியுடன் அங்கு வந்த பயங்கரவாதிகள் இருவர், அங்கிருந்தவர்களை சுட்டனர். சர்ச் வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர், பயங்கரவாதிகளில் ஒருவனை சுட்டார். உடல் முழுவதும் வெடி குண்டுகளை கட்டியிருந்த மற்றொரு பயங்கரவாதி, சர்ச்சுக்குள் வேகமாக நுழைந்து, தன்னை தானே வெடிக்க செய்து இறந்தான். இந்த தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உட்பட, 10 பேர் பலியாகினர்; 44 பேர் காயமடைந்தனர்.

மூலக்கதை