பெண்கள் மூலம் ரகசிய தகவல்: ஐஎஸ்ஐ சதி தோல்வி

தினமலர்  தினமலர்
பெண்கள் மூலம் ரகசிய தகவல்: ஐஎஸ்ஐ சதி தோல்வி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் 3 பேரை, பெண்கள் மூலம் மயக்கி, ரகசிய தகவல்களை பெற முயன்ற பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., சதி தோல்வியில் முடிந்தது.
உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளின் உளவு அமைப்புகள், எதிரி நாடுகளின் தூதரக அதிகாரிகளை பெண்கள் மூலம் மயக்கி ரகசிய தகவல்களை பெற முயற்சி செய்வது வழக்கம். இதில் சிக்கும் அதிகாரிகள் தங்கும் ஓட்டல் அறைக்கு பெண்களை அனுப்பி, அவர்களின் அந்தரங்க காட்சிகளை உளவு துறையினர் படம் பிடித்து கொள்வார்கள்.பின்னர் அதனை வைத்து மிரட்டி தங்களுக்கு தேவையான தகவல்களை பெற்று கொள்வார்கள்.

வலைவிரிப்பு

இந்த முறையை வைத்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் மொழி பெயர்ப்பு அதிகாரிகளாக பணியாற்றும் 3 பேருக்கு ஐ.எஸ்.ஐ., வலை விரித்தது. தங்களை மாட்ட வைக்கும் சதியை தெரிந்து கொண்ட அந்த அதிகாரிகள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, அந்த 3 பேரையும் உடனடியாக நாடு திரும்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்கள் நாடு திரும்பியதும் விசாரணை நடைபெற உள்ளது.

மூலக்கதை