‘சீட் பெல்ட்’
இந்திய மோட்டார் வாகன சட்டப்படி, கார் ஓட்டுனர் மற்றும் பயணியர், ‘சீட்பெல்ட்’ அணிவது கட்டாயம். அது, விபத்து நேரங்களில், உயிரிழப்பை பெரும் அளவில் குறைக்கிறது. ஆனால், பெரும்பாலானோர் அதை அணிவதில்லை. இது தொடர்பாக, மாருதி சுசூகி நிறுவனம், 17 முக்கிய நகரங்களில் ஆய்வு மேற்கொண்டது. அதில், 25 சதவீதத்தினர், அதை அணிவதில்லை என, தெரிய வந்தது. கடுமையான சட்ட நடவடிக்கை இல்லாததால், அதை அணிவதில்லை என, பெரும்பாலானோர், ஆய்வில் தெரிவித்து உள்ளனர்.