இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.
ஜாவா: இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா தீவில் நேற்றுஇரவு 11.47 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் கடலுக்கு அடியில் 91கி.மீ. ஆழத்தில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் உயிர் சேதம் குறித்த தகவல் இல்லை. 20 வினாடிகள் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு ஏராளமான கட்டடங்கள் குலுங்கின. பொதுமக்கள் வீடுகளை விட்டுவெளியேறி தெருவோரம் தங்கினர். கடலில் சுமார் 2 அடி உயரத்திற்கு அலை எழுந்ததாகவும் இது சுனாமியாக இருக்கலாம் எனவும் கூறப்படுிகிறது.