கொடூர விபத்து - பேருந்தின் பெண் சாரதியிடம் விசாரணை!!

PARIS TAMIL  PARIS TAMIL
கொடூர விபத்து  பேருந்தின் பெண் சாரதியிடம் விசாரணை!!

நேற்று நடந்த கொடூரமான பாடசாலைப் பேருந்து மற்றும் தொடருந்து விபத்தில் இறந்தவர்கள் தொகை அதிகாரபூர்வமாக ஐந்தாக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் மற்றும் பலியானவர்களின் பெயர் விபரங்களை மாவட்ட ஆணையம் வெளியி;ட்டுள்ளது. காமடைந்தவர்களில் 14 பேர் தொடர்ந்தும் அவசரசிகிச்சைப் பிரிவிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.
 
 
இந்த நில மட்டத் தொடருந்துக் கடவையின் மறிப்பு உயர்த்தப்பட்டிருந்த நிலையிலேயே, இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகின்றது. இதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
அதே நேரம் இந்த விபத்தில் படுகாயமுற்ற நிலையில் உள்ள, 48 வயதுடைய பெண்ணான, பேருந்துச் சாரதியிடம், இன்று மாலை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இவர் விபத்திற்குள்ளான autocars Faur  நிறுவனத்தின் சாரதியாவார்.
 
 

மூலக்கதை