Millas விபத்து! - மாணவர்களின் பலி எண்ணிக்கை ஆறாக அதிகரிப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
Millas விபத்து!  மாணவர்களின் பலி எண்ணிக்கை ஆறாக அதிகரிப்பு!!

நேற்று வியாழக்கிழமை Millas இல் இடம்பெற்ற விபத்தில் பலியாணவர்களின் எண்ணிக்கை நான்கில் இருந்து ஆறாக அதிகரித்துள்ளது. இது குறித்த தகவல்கள் முன்னதாக வழங்கியிருந்தோம். இந்நிலையில் தற்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, 
 
விபத்தில் முன்னதாக நான்கு மாணவர்கள் உயிரிழந்ததோடு 14 மாணவர்கள் காயமடைந்தும் இருந்தனர். Pyrénées-Orientales இல் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு சற்று முன்னதாக மாணவர்களில் இரு மாணவிகள் உயிரிழந்துள்ளனர். இத்தகவலை அப்பகுதி அரச அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். Pyrénées-Orientales இல் இடம்பெற்ற விபத்தில் தொடரூந்து கடவையை கடக்க முயன்ற மாணவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் 4 மாணவர்கள் கொல்லபட்டதோடு, 18 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 14 பேர் மாணவர்கள் ஆகும். 
 
மேலும் இந்த விபத்து, 1982 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெற்ற மிக மோசமான விபத்தாக இது பதிவாகியுள்ளது.

மூலக்கதை