குஞ்சாக்கோ போபன் ஷூட்டிங்கில் யானைகள் அட்டகாசம்..!

தினமலர்  தினமலர்
குஞ்சாக்கோ போபன் ஷூட்டிங்கில் யானைகள் அட்டகாசம்..!

மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடித்து வரும் படம் 'குட்டநாடன் மர்பப்பா'. கேரளாவில் கோதமங்கலம் பகுதியில் உள்ள காட்டில் செட் அமைக்கப்பட்டு இந்தப்படத்தின் படப்பிடிப்பு பல நாட்கள் நடைபெற்றுள்ளது.

சமீபத்தில் இரவில் இந்த படப்பிடிப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள், படப்பிடிப்பிற்காக போடப்பட்டு இருந்த செட்டை மிதித்து துவம்சம் செய்து விட்டு சென்றுள்ளன.

மேலும் அது கேரளாவின் சிரபுஞ்சி என அழைக்கப்படும், அடிக்கடி மழை பெய்யும் பகுதியாகும். அந்த பகுதியில் உள்ள பாலம் ஒன்றின் அருகில் காலையில் இருந்து படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தனராம். ஆனால் அன்று மதியமே திடீரென ஏற்பட்ட வெள்ளம் பாலத்தை மூழ்கடித்து ஓடியதாம்.

இந்த காட்சியையும் தத்ரூபமாக படம்பிடித்து படத்தில் சேர்த்துள்ளார்களாம்.

மூலக்கதை