உதய்பூரில் இரு சமூகத்தினரிடையே மோதல் : லவ் ஜிகாத் பிரச்னையில் கொலையாளிக்கு கைது எதிர்ப்பு தெரிவித்து பேரணி

தினகரன்  தினகரன்

ஜெய்ப்பூர் :ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் வெடித்ததால்பதற்றம் நிலவி வருகிறது. லவ் ஜிகாத் என்ற பெயரில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளி முகமது அப்ரசுல் என்பவரை கொலை செய்தவர்கள்  அதனை வாட்ஸ் அப் மூலம் பரவ செய்ததால், உதய்பூரில் மோதல் வெடித்தது. சிறுபாண்மை இனத்தைச் சேர்ந்த தொழிலாளிக்கு ஆதரவாக போராட்டம் தொடங்கியதால் கொலையாளி சம்புலால் ரேகர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.இதனால் சம்புலால் ரேகருக்கு ஆதரவாக திரண்ட ஹிந்துத்துவா அமைப்பினர் உதய்ப்பூரில் பிரமாண்ட பேரணி நடத்தினர். இதனை போலீசார் தடுத்ததால் பதற்றம் நிலவியது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தி 50 பேரை கைது செய்தனர். தொடர்ந்து இணையதளம் உள்ளிட்ட தகவல் தொடர்புகள் முடக்கப்பட்டுள்ளன. உதய்பூரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

மூலக்கதை