ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை : தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

தினகரன்  தினகரன்

டெல்லி: ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் கங்கை போன்ற நதிகள் மாசுடைகின்றன. நதிகள் மாசடைவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி. மேக்தா தொடர்ந்த வழக்கில், நீதிபதி ஸ்வாத்தனார் குமார் தலைமையிலான அமர்வு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்தரவு பின்வருமாறு: ஹரித்வார், ரிஷிகேஷ் பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், கரண்டி, டம்ளர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்களை வாங்கவும், விற்கவும் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறுபவர்களிடம் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவாரிலிருந்து உத்தர்காசி மாவட்டம் வரை பிளாஸ்டிக் பொருட்களை விற்க, தயாரிக்க மற்றும் சேமித்து வைக்கவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

மூலக்கதை