வீட்டுமனை, பெட்ரோலுக்கு விரைவில் சரக்கு சேவை வரி: பாஜ துணை முதல்வர் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
வீட்டுமனை, பெட்ரோலுக்கு விரைவில் சரக்கு சேவை வரி: பாஜ துணை முதல்வர் பேட்டி

புதுடெல்லி: ஜி. எஸ். டி. எனப்படும் சரக்கு சேவை வரி வரம்பிற்குள், பெட்ரோல், மின்சாரம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றை கொண்டு வர கவுன்சில் திட்டமிட்டு உள்ளதாக பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார். ஜி. எஸ். டி.

எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, நாடு முழுவதும் கடந்த ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஜி. எஸ். டி.

வரம்பிற்குள் பல பொருட்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. பெட்ரோல், டீசல், மின்சாரம், வீட்டு மனை போன்றவை கொண்டுவரப்படவில்லை.

ஜிஎஸ்டி வரம்புக்குள் இவை கொண்டுவரப்பட்டால் இவற்றின் விலை கணிசமாக குறையும். அதே சமயம் மாநிலங்களுக்கு வரி வருவாய் குறையும்.



இதன் காரணமாக இவற்றை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. பெட்ேரால், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் என நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பல முறை பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், ஜி. எஸ். டி. , கவுன்சிலில் இடம் பெற்றுள்ள மாநிலங்களின் நிதியமைச்சர்களின் தலைவரும், பீகார் துணை முதல்வருமான, பா. ஜ. ,வைச் சேர்ந்த, சுஷில் குமார் மோடி, டெல்லியில் நேற்று கூறியதாவது: ஜி. எஸ். டி.

வரம்பிற்குள், பெட்ரோலிய பொருட்கள், மின்சாரம், ரியல் எஸ்டேட், முத்திரைத்தாள் கட்டணம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்பது, ஜி. எஸ். டி. , கவுன்சிலின் விருப்பம்.

ஆனால், இவை எப்போது கொண்டு வரப்படும் என, காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது.

பெட்ரோலிய பொருட்களை, ஜி. எஸ். டி. ,யில் கொண்டு வந்தால், அதன் விலை நிச்சயம் குறையும். இதே போல், மின்சாரம், ரியல் எஸ்டேட், முத்திரைத்தாள் கட்டணம் ஆகியவற்றையும், ஜி. எஸ். டி. , யில் கொண்டு வந்தால், முறைகேடுகள் தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை