ஆஸ்கர் விருதுக்கான போட்டியிலிருந்து முதல் சுற்றிலேயே வெளியேறியது நியூட்டன்!

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்தியாவின் நியூட்டன் திரைப்படம், முதல் சுற்றிலேயே வெளியேறியது. 2018ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, வரும் மார்ச் 4ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இதில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவுக்காக, இந்தியா சார்பில் நியூட்டன் என்ற இந்தி திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்ற கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் முதல் சுற்றிலேயே வெளியேறியதாக, ஆஸ்கர் தேர்வுக்குழு தமது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான வகை பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் ஆஷுதோஷ் கோவாரிகரின் \'லகான்\' 2001ல் இடம்பெற்றது. ஆனால், இதுவரை எந்த இந்திய திரைப்படமும் ஆஸ்கார் விருதை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை