சென்னை திரைப்பட விழாவுக்கு அரசு 5 கோடி நிதி வழங்க வேண்டும் : சுஹாசினி கோரிக்கை

தினமலர்  தினமலர்
சென்னை திரைப்பட விழாவுக்கு அரசு 5 கோடி நிதி வழங்க வேண்டும் : சுஹாசினி கோரிக்கை

15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இதனை நடிகர் அரவிந்த்சாமி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் விழா ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான நடிகை சுஹாசினி பேசியதாவது:

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்துவற்கு போதிய நிதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம். ஆண்டுதோறும் இந்த பிரச்சினையை சந்தித்து வருகிறோம். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் பட விழாக்களுக்கு அரசு கணிசமான நிதி உதவி வழங்கி வருகிறது. குறிப்பாக கர்நாடக மாநில அரசு 10 கோடி நிதி உதவி வழங்குகிறது. அடுத்த ஆண்டு தமிழக அரசு அதில் பாதியாவது (5 கோடி) நிதி வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் இந்திய அளவில் சிறப்பானதாக இந்த விழாவை நாங்கள் நடத்துவோம் என்றார்.

மூலக்கதை