விசாகப்பட்டினத்தில் கூகுள் எக்ஸ் நிறுவனத்தின் தொழில் நுட்ப மையம் அமைக்க திட்டம்
ஆந்திரா: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூகுள் எக்ஸ் நிறுவனம், தனது தொழில் நுட்ப மையத்தை அமைக்கிறது. ஆந்திர அரசும், கூகுள் எக்ஸ் நிறுவனமும் ஒன்றிணைந்து தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகளில் செயல்படுவது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூகுள் எக்ஸ் நிறுவனம் தனது தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகரில், ஆந்திர மாநில தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் நரலோகேஷ், கூகுள் எக்ஸ் தலைமைச் செயலதிகாரி ஆஸ்ட்ரோ டெல்லர் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. பின்னர் ஆந்திர மாநில அமைச்சர் நரலோகேஷ், கூகுளின் ஓட்டுநர் இல்லாக் காரிலும் பயணம் செய்தார்.