பிரம்மபுத்திரா நதி மாசு அடைந்து வருவது குறித்து சீனாவிடம் கவலை தெரிவித்த இந்தியா

தினகரன்  தினகரன்

டெல்லி: பிரம்மபுத்திரா நதி மாசு அடைந்து வருவது குறித்து சீனாவிடம் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளிடம் இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறினார். பிரம்மபுத்திரா நதி மாசுபடுவது குறித்து சீன வெளியுறவு துறை அமைச்சரிடம், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கவலை தெரிவித்ததாக அவர் கூறினார். மேலும் பேசிய அவர் நதி நீர் பங்கீடு குறித்து நிர்வாக திட்டம் ஒன்றை செயல்படுத்த வேண்டும் என்பதை இந்தியாவும், சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறினார். திபெத் - இயமமலைத் தொடரில் உற்பத்தியாகும் பிரம்மபுத்திரா நதி அருணாச்சலப்பிரதேசம், அசாம் வழேிய ஓடி வங்கதேசத்தில் வங்ககடலில் கலக்கிறது. பிரம்மபுத்திரா நதி அருகே சீனா கட்டி வரும் அணையால் நதி நீர் மாசடைந்து வருகிறது. பிரம்மபுத்திரா நதி நீர் குடிப்பதற்கு தகுதியானது அல்ல என ஆய்வு ஒன்று கூறியுள்ளது நினைவுக் கூறத்தக்கது.

மூலக்கதை