ஓகி சேதத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் முறையீடு

தினகரன்  தினகரன்

டெல்லி : ஓகி புயலில் சிக்கி காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு  தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் குரல் எழுப்பினர். மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு ஓகி புயல் சீற்றத்தால் ஏற்பட்ட சேதத்தை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி   அதிமுக உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் முறையிட்டார். அப்போது பேசிய அவர், ஓகி புயல் சீற்றத்தால் குமரி மாவட்டம் கடுமையாக சேதம் அடைந்துள்ளது என்றார். இது குறித்து பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கிடையே ஓகி சேதத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.     அப்போது பிரச்னையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக அவைத் தலைவர் வெங்கயா நாயுடு உறுதி அளித்தார்.தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் பதவி பரிவு பிரச்னையை காங்கிரஸ் உறுப்பினர் எழுப்பியதால் அவையில் கூச்சம், குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து ஒத்திவைக்கப்பட்ட அவை மீண்டும் 12 மணிக்கு மீண்டும் கூடியபோது , எதிர்க்கட்சி உறுப்பினர் மீண்டும அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை மீண்டும் ஒத்திவைக்க நேரிட்டது.

மூலக்கதை