கொழும்பில் நிகழ்ந்த திடீர் மாற்றம்!
இலங்கையின் தலைநகர் கொழும்பு முழுவதும் இன்று காலை திடீர் மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய திடீரென கொழும்பு நகரம் மூடு பனியால் மறைந்து காணப்பட்டதாக வளிமண்டவியல் திணைக்களம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
மூடு பனி ஏற்படுவதற்கு ஏதுவான காலநிலை இன்று அதிகாலை காணப்பட்டதாக திணைக்கள அதிகாரி கசுன் பாஸ்குவல் தெரிவித்துள்ளார்.
சூழலின் வெப்ப நிலையில் ஏற்பட்ட சமநிலை காரணமாக மூடு பனி ஏற்படும். இன்று அதிகாலை முகில்கள் குறைந்த அளவு காணப்பட்டடுள்ளது. இதனால் சூழலின் வெப்ப நிலை குறிப்பிடத்தக்க வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன் மழையுடனான காலநிலை காரணமாக வளிமண்டலத்தின் நீராவி மட்டம் அதிகரித்தமையினால் ஈரப்பதம் அதிகமாக இருந்தது.
இந்த நிலைமையே கொழும்பு நகரம் இன்று அதிகாலை மூடுபனியினால் மூடுவதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.