5 பாக். குழந்தைகளுக்கு மருத்துவ விசா: சுஷ்மா தகவல்

தினமலர்  தினமலர்
5 பாக். குழந்தைகளுக்கு மருத்துவ விசா: சுஷ்மா தகவல்


புதுடில்லி: பாகிஸ்தானைச் சேர்ந்த 10 மாத குழந்தை உள்பட 5 குழந்தைகளுக்கு மருத்துவ விசா வழங்க அனுமதி அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பாக சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியது, பாக். இந்திய தூதரகத்தி்ல் இருந்து வந்த தகவலில் பாகிஸ்தானைச் சேர்ந்த 10 மாத குழந்தை , அபுசார்,7, மொஹிர்,7, ஜினாப் ஷகாதி,8 , முகமது ஜையின் அஸ்லாம்,9 என 5 குழந்தைகளுக்கு இந்தியாவி்ல் உயரிய மருத்துவ சிகிச்சை வேண்டி விசா வழங்கிட கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்று விசா வழங்கிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அல்தாப் ஹூசேன், அமீர் ராஸா ஆகிய இருவரும் இந்தியாவில் கல்லீரல் மாற்று சிகிச்சை பெற வேண்டி விசா கோரியதால் அவர்களுக்கும் விசா வழங்கிட அனுமதிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் பூரண நலம் பெற்று நாடு திரும்ப வாழ்த்துகிறேன். இவ்வாறு சுஷ்மா தனது டுவிட்டரில் கூறியுள்ளார்

மூலக்கதை