இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உடல் அடக்கம் ; பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

தினமலர்  தினமலர்
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உடல் அடக்கம் ; பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி: ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனில் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
சென்னையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை கொள்ளையர்கள் சுட்டதில் வீரமரணமடைந்தார்.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அவரது உடல் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. சென்னையில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அவரது உடல் மதுரைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அவரது சொந்தஊரான திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவி்ல் அருகே உள்ள மூவிருந்தாளி, சாலைப்புதூருக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு ஊர் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, நெல்லை மாவட்ட எஸ்.பி., மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்., கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், உட்பட பலர் அஞ்சலிசெலுத்தினர்.
அங்கு அவரது உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

மூலக்கதை