குடியரசுப் பாதுகாப்புப் படைவீரர் தற்கொலை!

PARIS TAMIL  PARIS TAMIL
குடியரசுப் பாதுகாப்புப் படைவீரர் தற்கொலை!

குடியரசுப் பாதுகாப்புப் படையணியான CRS (compagnies républicaines de sécurité) வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 55 வயதுடைய இவர், நேற்றிரவு Saint-Brévin (Loire-Atlantique) இலுள்ள தனது வீட்டில், சேவைத் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 
CRS 42 de Saint-Herblain  படையணியில் பணியாற்றி வந்த இவர், இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற இருந்தார் என்றும், அண்மைக் காலமாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் சிக்கல்களைச் சந்தித்து வந்திருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவர் தனது தற்கொலைக்கு முன்னர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்துள்ளார். ஆனாலும் இக்கடிதத்தின் விபரங்கள் எதுவும் ஊடகங்களிற்க வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்த வருட (2017) ஆரம்பத்தில் இருந்து, இதுவரை காவற்துறையினரிற்குள் நடக்கும் 49வது தற்கொலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தேசியக் காவற்துறையினரின் தலைமை நிர்வாகமான DGPN (Direction Générale de la Police Nationale) இது தொடர்பான உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த விசாரணையில் காவற்துறையினரின் தொழிற்சங்கமும், உள்துறை அமைச்சகமும் பங்கேற்கின்றன.
 

மூலக்கதை