Seine-et-Marne - தொடரூந்து முன் மகிழுந்தை நிறுத்தி தற்கொலை!!

PARIS TAMIL  PARIS TAMIL
SeineetMarne  தொடரூந்து முன் மகிழுந்தை நிறுத்தி தற்கொலை!!

மனைவியின் பிரிவால் வாடிய 80 வயதுடைய நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது மகிழுந்தை தொடரூந்து தண்டவாளத்தில் நிறுத்தி தற்கொலை மேற்கொண்டுள்ளார். 
 
நேற்று புதன்கிழமை Seine-et-Marne இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இன்று வியாழக்கிழமை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து இரவு 8.20 மணிக்கு இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் முதல் இதை தொடரூந்து விபத்து என நினைத்திருந்தனர். பின்னர் விசாரணைகளில் இது தற்கொலை என தெரியவந்தது. 
தொடரூந்து Melun இல் இருந்து Montereau (Yonne) நோக்கி சென்றுகொண்டிருந்தது. 62 பயணிகள் தொடரூந்துக்குள் இருந்தனர் எனவும், அவர்களில் எவரும் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மகிழுந்துடன் தொடரூந்து மோதியதில் மகிழுந்து 600 மீட்டர்களுக்கு இழுத்துச்சென்றுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். 
 
காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தண்டவாளத்தினை துப்பரவு செய்யும் பணிகள் அதிகாலை 4.30 மணிக்கு நிறைவடைந்ததாகவும், மகிழுந்து முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மனைவி அல்சீமர் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்ததில் இருந்து தனிமையில் வாழ்ந்ததாகவும், துயர் தாளாமல் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

மூலக்கதை