பாடசாலைப் பேருந்தும் தொடருந்தும் விபத்து - மாணவர்கள் பலி!!
Perpignan (Pyrénées-Orientales) நகரிற்கு ஆருகிலுள்ள Millas இல் TER தொடருந்தும் பாடசாலைப் பேருந்தும் விபத்திற்கு உள்ளாகி உள்ளன. இதில் நால்வர் கொல்லப்பட 24 பேர படுகாயமடைந்துள்ளனர்.
lieu-dit Los Palaus வீதி மட்டத் தொடருந்துக் கடவையில் இன்று மாலை 16 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் கொல்லப்பட்ட நால்வரும் பாடசாலைப் பிள்ளைகள் ஆவார்கள். காயமடைந்த 24 பேரில் பலர் உயிராபத்தான நிலையில் உள்ளனர்.
உடனடியான ஒரு பெரும் சிகிச்சை மையம் விபத்து நடந்த இடத்தில் அமைக்கப்பட்டு, உடனடி சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரதமர் எதுவார் பிலிப் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்குச் சென்றுள்ளார்.