Puy-de-Dôme - சிறைக்கைதி தூக்கிட்டு தற்கொலை!!

PARIS TAMIL  PARIS TAMIL
PuydeDôme  சிறைக்கைதி தூக்கிட்டு தற்கொலை!!

பெண் கைதி ஒருவர் சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  Riom (Puy-de-Dome) இல் உள்ள புதிய சிறைச்சாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
காவல்துறையினர் தெரிவிக்கும் போது, குறித்த 43 வயதுடைய பெண், கடந்த வரத்தில் தான் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் எதிர்பாரா விதமாக, நேற்று முன்தினம், செவ்வாய்க்கிழமை, அணிந்திருந்த உடையினை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியில் இருந்து 7.30 மணிக்குள்ளாக இந்த தற்கொலை இடம்பெற்றுள்ளது என் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த் பெண் உளவியல் தாக்கத்துக்கு உள்ளாகியிருந்ததால் இந்த தற்கொலை இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்ப்ட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 
 
தவிர, பிரான்ஸ் முழுவதும் உள்ள சிறைக்கைதிகளில் 30 தொடக்கம் 40 வரையாக கைதிகள் உளவியல் சீர்கேட்டுக்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக பயிற்சிகளோ, அதற்குரிய மருத்துவர்களோ இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Puy-de-Dôme சிறைச்சாலை கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து சேவைக்கு வந்துள்ளது. இதுவே முதன் முதலான தற்கொலை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை